செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து

0
8

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

உலக நாடுகளில் உள்ள செஸ் வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ள சென்னைக்கு அருகில் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் செஸ் ஓலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வருகைப் புரிய உள்ளனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டின் இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவை நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு அழைத்து அவரையும் அவரது குடும்பத்தையும் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து

உலகப்புகழ் பெற்ற செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது பெருமை அதிலும் தமிழ்நாட்டில் உலக பெருமைப் பெற்ற மாமல்லபுரத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது தமிழகத்திற்கு பெருமை  சேர்த்துள்ளது.

இந்நிலையில், ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக வீரர்கள் பிரக்ஞானந்தா மற்றும் அவரின் சகோதரி வைசாலி ஆகியோரை நேரில் அழைத்து வாழ்த்தினார். இருவரும் செஸ் ஓலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here